Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் மாமியாரை கற்பழித்த மருமகன்

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (09:26 IST)
திண்டுக்கல்லில் குடிபோதையில் மருமகன் மாமியாரை கற்பழித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் புங்கம்பாடி பிரிவைச் சேர்ந்வர் வெங்கிடுசாமி. இவரது மனைவி ராமுத்தாய். இவர்களுக்கு சென்ராயன், மாரிமுத்து என்ற மகன்களும் தனலட்சுமி என்ற மகளும் இருந்தனர். தனலட்சுமிக்கு முத்தையா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கலைச்செல்வி என்ற மகள் உள்ளார்.
 
இந்நிலையில் சமீபத்தில் அடுத்தடுத்து ராமுத்தாயின் கணவர் வெங்கிடுசாமி, மகள் தனலட்சுமி, மகன் மாரிமுத்து ஆகியோர் இறந்ததால் ராமுத்தாய் தனது பேத்தி தனலட்சுமியுடன் வசித்து வந்தார்.
 
இதற்கிடையே கலைச்செல்வி வேலைக்கு சென்றபோது, அவர்களது வீட்டிற்கு குடிபோதையில் வந்த முத்தையா, தனது மாமியார் ராமுத்தாயிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ராமுத்தாய் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
 
இதனால் கடுப்பான முத்தையா மாமியார் என்றும் பாராமல் அவரை கற்பழித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளான்.
 
இதையடுத்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ராமுத்தாயின் உடலை மீட்டனர். இந்த கொலை குறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், கொடூரன் முத்தையாவை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments