மரக்கிளையில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய மினி லாரி...

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (18:28 IST)
தென்காசி, மாவூர்சத்திரம் அருகே மரக்கிளையில் சிக்கி ஒரு மினி லாரி அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி,  பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையார் இந்தியா நகர் பகுதிக்குச் செல்லும்  நெடுஞ்சாலையில் மரங்கள் அடர்த்தியாக உள்ளது.

இதனால் அந்த சாலையின் வழியே செல்லும்போது, பேருந்துகள், லாரிகள் மீது வாகனங்கள் உரசுவதாக கூறி வந்தனர்.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் பலர் நெடுஞ்சாலை துறையினரிடம் ‘இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி’ புகார் அளித்தனர்.

ஆனால் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில்,  பாவூர்சத்திரம் மாடக்கண்ணுப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் இன்று தன் மினி லாரியில், தண்ணீர்கேன் போட்டுவிட்டு அதேவழியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த மரக்கிளையின் மீது மினி லாரி மோதி அந்தரத்தில் தொங்கியது.

அருகில் இருந்தவர்கள் லாரியில் இருந்து ஓட்டுனர் சுப்பிரமணியனை மீட்டனர்….

இந்தச் சம்பவம்  அப்பகுதியில் பரபப்பு ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments