Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பிரதமர் மோடி’ குரலில் மிமிக்ரி செய்த நபர் கைது : பரபரப்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 2 ஜூன் 2019 (12:42 IST)
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் பிறந்தவர் அவ்தேஷ் துபே ஆவார். இவர் தனது சிறு வயதிலேயே குஜராத் மாநிலத்துக்கு பெற்றோருடன் குடிபெயர்ந்தார்.
இவர் தற்பொழுது அவர் ஓடும் ரயிலில் பொம்மைகளை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். அவ்ர் ரயிலில் பொருட்களை விற்பதற்காக அல்தேஷ் துபே,பிரதமர் மோடி,  அரவிந்த் கெஜ்ரிவால், சோனியா காந்தி போன்றோரின் குரலில் பேசி வியாபாரம் செய்துள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து சூரத் ரயில்வே பதுகாப்பு படையினரால் அவ்தேஷ் துபே திடீரென்று கைது செய்யப்பட்டுள்ளார். அவ்தேஷ் துபே அநாசியமான வார்த்தைகள்  எதையும் பேசவில்லை என்று தெரிகிறது.
 
ஆனால் பொதுவிடத்தில் ரயிலில் பயணிகளின் அமைதியை கெடுத்தல், சட்டவிரோதமாக ரயில் பெட்டிகளில் நுழைதல் ஆகிய விதிகளின் கீழ் அவ்தேஷ்துபே மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments