Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணியின் தங்கையை வீட்டிற்கு வரவழைத்து அரங்கேற்றிய வெறிச்செயல்!!! வாலிபர் கைது...

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (12:17 IST)
அண்ணியின் தங்கையை கொலை செய்த வாலிபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சென்னையை சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் தனது அண்ணியின் தங்கையான அகிலா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. தஞ்சாவூரை சேர்ந்த அகிலா சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார்.
 
இருவரும் காதலித்து வந்த நிலையில் அகிலா திடீரென சந்தோஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அகிலாவை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சந்தோஷ், அகிலாவை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
 
பின்னர் அகிலா கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது. இதையடுத்து போலீஸார் சந்தோஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

கடலூர் ரயில் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு..!

நேற்றும் இன்றும் மந்தமான வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

சரக்கு குடிச்சிருந்தார்.. தமிழும் தெரியல..! வடக்கு கேட் கீப்பர் மீது பொதுமக்கள் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments