Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 வயது சிறுமியை கண்முன்னே கவ்விச் சென்ற சிறுத்தை! வால்பாறையில் சோகம்! - தேடும் பணி தீவிரம்!

Prasanth K
சனி, 21 ஜூன் 2025 (10:05 IST)

கோவை மாவட்டம் வால்பாறையில் 6 வயது சிறுமியை சிறுத்தை கவ்விக் கொண்டு சென்ற நிலையில் சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

கோவை மாவட்டம் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் பல வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறாக பணிபுரிந்து வந்த தம்பதியர் ஒருவரின் 6 வயது குழந்தை ரோஷினி அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை ஒன்று, தாய் கண் முன்னே ரோஷினியை கவ்விக் கொண்டு சென்றது.

 

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததுடன் அருகாமை பகுதிகளில் சிறுத்தை இருக்கிறதா என தேடி பார்த்துள்ளனர். விரைந்து வந்த வனத்துறையினரும், காவல் துறையினரும் சிறுமியின் உடலை தேடும் பணியிலும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாய் கண் முன்னே குழந்தை சிறுத்தைக்கு இரையான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கின்னஸ் சாதனை படைக்கப் போகும் மதுரை முருகன் மாநாடு!? - லட்சக்கணக்கான பக்தர்கள் தயார்!

அமைதிக்கு மறுபெயர் ட்ரம்ப்! நோபல் பரிசு குடுக்கணும் அவருக்கு..! - ஜிங் ஜக் அடிக்கும் பாகிஸ்தான்!

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments