Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் சிலை அவமதிப்பு - வழக்கறிஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (14:39 IST)
பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் ஜெகதீசன் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17 ஆம் தேதி தெமிழகமெங்கும் பெரியாரின் 140வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவரது சிலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
 
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அந்த வழியாக வந்த வழக்கறிஞர் ஜெகதீசன் என்பவர் தன் காலில் இருந்த காலணியை எடுத்து பெரியார் சிலை மீது வீசினார்.
 
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர். இச்சம்பவம் தமிழகமெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வனாதன் உத்தரவின் பேரில் ஜெகதீசன் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments