Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரக்கு குடுக்கலனா இறங்க மாட்டேன்! ரயில் பாலம் மேல் வடமாநில தொழிலாளி அலப்பறை!

Viral Video
, புதன், 30 நவம்பர் 2022 (13:03 IST)
சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் மது கேட்டு வடமாநில தொழிலாளி காவலர்களிடம் அலப்பறை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் காலை வழக்கம்போல பலரும் அன்றாட வேலைகளுக்காக ரயில் ஏற சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது வடமாநில தொழிலாளி ஒருவர் ரயில் நடைபாலத்தில் ஏறி அதன் பக்கவாட்டு கம்பி க்ரில்லை தாண்டி சென்று கீழே விழுவது போல ஒரு இரும்பு ராடில் அமர்ந்து கொண்டார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ரயில்வே போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்த ரயில்வே போலீஸார் அந்த தொழிலாளியை சமரசம் செய்து மீட்க முயன்றனர். ஆனால் தனக்கு மதுபானம் வாங்கி தந்தால்தான் வருவேன் என அவர் அடம்பிடித்துள்ளார்.

இதனால் ஒரு மதுபாட்டிலை வாங்கி வந்து காட்டி அவரை சமாதானம் செய்து பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது