Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிக்ஜாம்’ புயல் எதிரொலி: நாளை மெட்ரோ ரயிலில் ஒரு முக்கிய மாற்றம்..!

Advertiesment
மிக்ஜாம்’ புயல் எதிரொலி: நாளை மெட்ரோ ரயிலில் ஒரு முக்கிய மாற்றம்..!
, ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (17:25 IST)
மிக்ஜாம்’ புயல் காரணமாக நாளை திங்கட்கிழமை அதாவது டிசம்பர் 4ஆம் தேதி ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே நாளை அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும், காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும்,  இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புயலை பார்க்க கடற்கரைக்கு படையெடுக்கும் மக்கள்! – எச்சரித்து அனுப்பும் காவல்துறை!