Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 500 கொடுத்தால் விபச்சாரத்திற்கு வருவார்: மனைவியின் மொபைல் எண்ணை பரப்பிய கணவன் கைது

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (09:39 IST)
மனைவி மீது உள்ள கோபத்தில் அவர் குளிப்பதை படம் எடுத்து 500 ரூபாய் பணம் கொடுத்தால் இவர் விபச்சாரத்திற்கு வருவார் என சமூகவலைதளத்தில் மனைவியின் மொபைல் எண்ணை பரப்பிய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
வேலூரை சேர்ந்தவன் குமார். இவனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 
 
மதுப்பழக்கத்திற்கு ஆளான குமார் மனைவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டு மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளான். இதனால் அவர்களுக்கிடையே அவ்வப்போது சண்டை இருந்து வந்துள்ளது.
 
இந்நிலையில் கொடூரன் குமார் மனைவியை பழிதீர்க்க அவர் குளிக்கும் போது வீடியோ எடுத்து 500 ரூபாய் பணம் கொடுத்தால் இவர் விபச்சாரத்திற்கு வருவார் என மனைவியின் செல்போன் எண்ணுடன் அந்த வீடியோவை பரப்பியுள்ளான்.
 
இதனையடுத்து பல்வேறு நபர்கள் சசிகலாவிற்கு போன் செய்து ஆபாசமாக பேசியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த சசிகலா விஷம் குடித்துள்ளார்.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் போலீஸார் அயோக்கியன் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments