Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையிலுள்ள மனைவிக்கு கஞ்சா சப்ளை செய்த கணவன் கைது!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (15:12 IST)
குற்ற வழக்கில் கைதாகி கடலூர் மத்திய சிறையில் இருக்கும் மனைவிக்கு, நூதன முறையில் கஞ்சா பொட்டலத்தை கொடுக்க முயன்ற கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனுர் பகுதியைச் சேர்ந்த திலகவதி, கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு கடலூர் மத்திய சிறை வளாகத்திற்கு வெளியே வந்த திலகவதியின் கணவர் சுதாகரன், உறவினர் தினகரன் ஆகியோர் கல்லில் கஞ்சா பொட்டலத்தை கட்டி, சிறைச்சாலை உள்ளே வீசியுள்ளனர். இதனைப்பார்த்த காவல்துறையினர் உடனடியாக வெளியே சென்று சுதாகரனை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய தினகரனை தேடி வருகின்றனர். சிறைச்சாலையில் இருக்கும் தனது மனைவிக்கு, கணவனே கஞ்சா பொட்டலத்தை கொடுக்க முயன்ற சம்பவம் மற்ற கைதிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றம் செய்யும் நபர்கள் திருந்த வேண்டி தான் அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறது, ஆனால் அதற்கு எதிர்மரையாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments