'அவர்கள் வாழ்விலும் புதுமைகள் மலரட்டும்-அமைச்சர் உதயநிதி

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (13:36 IST)
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் வழியில், நம் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களும், ‘கான்கிரீட் கூரைக்கு கீழ் ஒரு வீடு’ எனும் விளிம்பு நிலை மக்களின் கனவை நனவாக்கி வருகிறார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’சென்னை போன்ற மாநகரில் வசிப்போருக்கு சொந்த வீடு என்பது பெருங்கனவு. அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காக 70-களிலேயே எண்ணற்ற திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தந்தார்கள். கலைஞர் அவர்கள் வழியில், நம் மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களும், ‘கான்கிரீட் கூரைக்கு கீழ் ஒரு வீடு’ எனும் விளிம்பு நிலை மக்களின் கனவை நனவாக்கி வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக, நம்முடைய சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி, எம்.ஏ சாகிப் தெரு & நாவலர் நெடுஞ்செழியன் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் புதிய வீடுகளை வழங்குவதற்கான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை இன்று வழங்கினோம்.

வீடு கிடைத்த மகிழ்ச்சியை அன்பாகப் பொழிந்த தொகுதி மக்களுக்கு என் வாழ்த்துகள். புது  வீட்டில் அவர்கள் வாழ்விலும் புதுமைகள் மலரட்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments