Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5ஆம் வகுப்பு மாணவனின் கையை உடைத்த தலைமை ஆசிரியர்

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (13:20 IST)
மதுராந்தகம் அருகே தலைமை ஆசிரியர் ஒருவர் 5ஆம் வகுப்பு மாணவனின் கையை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் மலைப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவன் ஜீவரத்தினம்.  அரசுப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய மாணவன் தனது இடது கையை பிடித்தவாறு வீட்டில் அழுது கொண்டிருந்தான்.
 
வீட்டிற்கு வந்த பெற்றோர் ஏன் இப்படி கையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க என கேட்ட போது, வீட்டுப்பாடம் முடிக்காததால் தலைமை ஆசிரியர் பிரம்பால் அடித்து உதைத்ததாகவும், இதில் தனது கையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தான்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றனர். சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், அவனுக்கு கையில் முறிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் தங்கள் பிள்ளையின் கையை அடித்து உடைத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments