Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

Prasanth Karthick
திங்கள், 2 ஜூன் 2025 (09:50 IST)

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஏராளமான அரசு பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் ஒரு மாணவிக்காக மட்டும் ஒரு பள்ளி செயல்பட்டு வரும் செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை யூனியனில் 112 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தொண்டி அருகே தளிர் மருங்கூர் சென்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒரே ஒரு சிறுமி மட்டும் படித்து வருகிறார்.

 

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. 5ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர், இரண்டு மாணவர்கள் மட்டுமே இருந்துள்ளனர். சிறுவன் ஒருவன் 5ம் வகுப்பிலும், சிறுமி ஒருவர் 2ம் வகுப்பிலும் படித்து வந்துள்ளனர். சிறுவன் 5ம் வகுப்பு முடித்த நிலையில் அடுத்த பள்ளிக்கு மாறுகிறார். பள்ளி தலைமை ஆசிரியரும் சில மாதங்கள் முன்னதாக ஓய்வு பெற்று விட்டார். 

 

இதனால் பள்ளி மூடப்படும் அபாயம் உள்ள நிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments