Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாப்பிள்ளை கிடைக்காததால் விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (11:17 IST)
திருச்சியில் அரசு வேலைப் பார்க்கும் மாப்பிள்ளை கிடைக்காததால் இளம்பெண் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் பாலக்கரையைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் சிவசங்கரி (32). பட்டதாரியான இவருக்கு திருமணம் முடிக்க, அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். ஆனால் சிவசங்கரிக்கு அரசு வேலைப் பார்க்கும் மாப்பிள்ளை தான் தனக்கு கணவராக வர வேண்டும் என ஆசை இருந்தது. ஆனால் அவர் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை, தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இதுபற்றி சிவசங்கரி  பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் சிவசங்கரிக்கு ஏற்கனவே, திருமண வயதை கடந்து விட்டதாலும், அரசு வேலை பார்க்கும் மாப்பிள்ளை கிடைக்காததாலும் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த சிவசங்கரி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிவசங்கரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்