Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் 65ல சிக்கனே இல்ல..! – ஓட்டலில் அட்டூழியம் செய்த போதை கும்பல்!

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (11:16 IST)
தாம்பரம் அருகே சேலையூரில் உணவகம் ஒன்றில் சிக்கன் பீஸ் கெட்டு தகராறு செய்த போதை கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தாம்பரம் அருகே சேலையூர் பிரதான சாலையில் உணவகம் ஒன்றை நடத்தி வருபவர் ராஜா. இவரது உணவகத்திற்கு நேற்று முன்தினம் மது அருந்திய கும்பல் ஒன்று உணவருந்த வந்துள்ளது. அவர்கள் சிக்கன் 65, ஆம்லேட் என பலவகை உணவுகளையும் ஆர்டர் செய்துள்ளனர்.

அவர்களுக்கு தரப்பட்ட சிக்கன் 65ல் சிக்கனே இல்லை என கூறி வாக்குவாதம் செய்ததோடு, சப்ளையர்களையும் ஒருமையில் பேசியுள்ளனர். இதனால் கடைக்காரருக்கும், அவர்களுக்கும் தகராறு எழுந்த நிலையில் பணத்தை கொடுக்காமல் தப்பி செல்ல முயன்றுள்ளனர்.

அவர்களை தடுக்க முயன்ற பொதுநபர் ஒருவரின் தங்க சங்கிலியையும் பறித்துக் கொண்டு அந்த கும்பல் சிட்டாக பறந்துள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட வழக்கின்பேரில் வண்டி எண், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் 5 பேரை கைது செய்துள்ளனர், அதில் ஒருவர் மைனர். இவர்கள் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments