Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாரிடமிருந்து தப்பிக்க மோசடி மன்னன் தற்கொலை முயற்சி

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (15:38 IST)
மோசடி வழக்கில் தொடர்புடைய அயோக்கியன் ஒருவன் போலீஸார் முன்னிலையில் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் முத்தையா(50). இவர் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அங்கிருந்த மக்களை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி செய்து பெருந்துறைக்கு தப்பி வந்தார். முத்தையா பெருந்துறையில் இருப்பதை அறிந்த புனே போலீஸார், நேற்று முன்தினம் காலை பெருந்துறை வந்தனர். 
பெருந்துறை போலீசாரின் உதவியுடன், முத்தையா வீட்டிற்கு சென்ற போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையின் போது முத்தையா கழிப்பறை செல்ல அனுமதி கேட்டார். போலீஸாரும் அவரை அனுமதிக்கவே, 'ஹார்பிக்' திரவத்தை குடித்து, தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, முத்தையா புனே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்! - கன்னியாகுமரியில் ஜூன் 22-இல் நடைபெறுகிறது

2400 ரூபாய் கொடுத்தால் ரத்தம் கிடைக்கும்.. அரசு மருத்துவமனை முன் நடக்கும் வியாபாரம்.. அதிர்ச்சி தகவல்..!

KYC சரிபார்ப்பு என்ற பெயரில் இளம்பெண்ணிடம் ₹8.10 லட்சம் மோசடி: எஞ்சினியர் கைது..!

10 நிமிடம் சார்ஜ் செய்தால் 27 மணிநேரம் பயன்படுத்தலாம்! வந்துவிட்டது ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z3..!

அடுத்த கட்டுரையில்
Show comments