Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாரிடமிருந்து தப்பிக்க மோசடி மன்னன் தற்கொலை முயற்சி

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (15:38 IST)
மோசடி வழக்கில் தொடர்புடைய அயோக்கியன் ஒருவன் போலீஸார் முன்னிலையில் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் முத்தையா(50). இவர் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அங்கிருந்த மக்களை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி செய்து பெருந்துறைக்கு தப்பி வந்தார். முத்தையா பெருந்துறையில் இருப்பதை அறிந்த புனே போலீஸார், நேற்று முன்தினம் காலை பெருந்துறை வந்தனர். 
பெருந்துறை போலீசாரின் உதவியுடன், முத்தையா வீட்டிற்கு சென்ற போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையின் போது முத்தையா கழிப்பறை செல்ல அனுமதி கேட்டார். போலீஸாரும் அவரை அனுமதிக்கவே, 'ஹார்பிக்' திரவத்தை குடித்து, தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, முத்தையா புனே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

அடுத்த கட்டுரையில்
Show comments