அப்பளம் போல் நொறுங்கிய கார்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ, மனைவி உள்பட 3 பேர் பலி!!!

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (11:39 IST)
ஆம்பூரில் நடைபெற்ற சாலை விபத்தில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ அவரது மனைவி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவான சுந்தரவேல்(62) தனது மனைவியுடன் ஆம்பூரிலிருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது டிரைவர் ஓட்டிச்சென்றார். அப்போது கார் விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கன்டெய்னர் லாரி மீது மோதியது.
 
இந்த விபத்தில் காரில் இருந்த எம்.எல்.ஏ அவரது மனைவி மற்றும் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எந்த வங்கிக்கு மாறும்?

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments