Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா” – கூகிள் மேப் பார்த்து வெள்ளத்தில் சிக்கிய கார்!

Advertiesment
Flood
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (08:38 IST)
ஓசூரில் கூகிள் மேப் பார்த்து காரில் சென்று தவறுதலாக வெள்ளத்தில் குடும்பம் ஒன்று சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில காலமாக தென்மேற்கு பருவமழையால் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழக – கர்நாடக எல்லை பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் ஓசூர் வழியாக பேகேப்பள்ளி அருகே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் சார்ஜாபூரை சேர்ந்த ராகேஷ் என்பவர் குடும்பத்துடன் ஓசூர் வந்துள்ளார். நள்ளிரவில் அவர்கள் திரும்ப சார்ஜாபூர் புறப்பட்ட நிலையில் கூகிள் மேப் வழிகாட்டலின் பேரில் காரில் சென்றுக் கொண்டிருந்துள்ளனர்.

கூகிள் மேப் பேகேப்பள்ளி அருகே உள்ள தரைப்பாலத்தை கடந்து செல்லும்படி காட்டியதால் காரை தரைபாலம் நோக்கி செலுத்தி ராகேஷ் குடும்பத்துடன் வெள்ளத்தில் சிக்கினார். உடனடியாக வெள்ளத்தின் அதிக நீரோட்ட பகுதிக்கு செல்லும் முன்னதாக காரை நிறுத்திய ராகேஷ் தீயணைப்பு துறையை தொடர்பு கொண்டுள்ளார்.

சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்ட் சென்று காரில் இருந்த 4 பேரையும் மீட்டனர். பின்னர் காரையும் மீட்டனர். கூகிள் மேப்பை நம்பி குடும்பம் ஒன்று வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக எம்.எல்.ஏக்கள் இரவில் தர்ணாப் போராட்டம்: என்ன காரணம்?