Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரமற்ற முறையில் தார்சாலை அமைத்த ஒப்பந்ததாரர்

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (20:50 IST)
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில்  தரகம்பட்டியில் இருந்து வீரசிங்கம்பட்டி செல்லும் சாலையை புதுபிக்க ஒப்பந்ததாரர் புதிய சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். சுமார் 4 கிலோமீட்டர் தார் சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
 
இந்த தார் சாலை அமைத்தால் பொதுமக்கள் தரகம்பட்டியில் இருந்து வீரசிங்கபட்டி வழியாக வீரப்பூர் செல்லும் பிரதான சாலையாக இருக்கும்.  தார்சாலை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள் கடந்த 2 மாதம் நடைபெற்று வந்தது.
 
அனைத்து பணிகளும் முடிந்து நேற்று இந்த தார் சாலை பணி நிறைவு பெற்றுள்ளது.
 
ஆனால், முறையாக தார்சாலை போடாமல், ஏற்கனவே இருந்த தார் சாலையை அகற்றாமல் அதன் மேலேயே அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தரமற்ற சாலை போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கைகளால் உருட்டினால் அடை போல சுருளும் அவலநிலை உள்ளது.
 
தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட தார் சாலையின் நிலைமை குறித்து பொதுமக்கள் வெளியிட்ட வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
 
மேலும், தரமற்ற முறையில் தார்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments