Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாசன் ஐ கேர் அருண் மரணத்தில் சந்தேகம்: உறவினர்கள் புகார்!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (11:00 IST)
வாசன் ஐ கேர் அருண் மரணத்தில் சந்தேகம்:
வாசன் ஐ கேர் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் அருண் திடீரென நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்
 
இந்த நிலையில் திடீரென அருணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் அருண் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து சந்தேக மரணமாக சென்னை தேனாம்பேட்டை போலீசார் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
அருண் அவர்களின் முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் சந்தேக மரணம் இல்லை என்பது உறுதியாகி உள்ளதாகவும் இருப்பினும் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்
 
வாசன் ஐகேர் குழுமத்தின் தலைவர் அருண் அவர்களை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சிலர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments