Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (12:55 IST)
தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தபோது தடுப்பூசி எதற்கு என்றும் தடுப்பூசியை யார் கேட்டார்கள் என்றும் கூறினார். மேலும் கொரோனா என்பதே இல்லை என்றும் கொரோனா இருப்பதாக அரசு மத்திய மாநில அரசுகள் நாடகம் ஆடுவதாகவும் தடுப்பூசி தேவையில்லை என்றும் தடுப்பூசியால் ஆபத்து வரும் என்று சரமாரியாக புகார் அளித்தார்
 
அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் ’தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூரலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்படும் என்று கூறினார். மேலும் ஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments