Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு: தமிழகத்தில் பெரும் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (08:19 IST)
சர்கார் பட விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சர்கார்' படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இன்று முதல் மறுதணிக்கை செய்த படம் திரையிடப்படவுள்ள நிலையில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலை தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

சர்கார் படத்திற்கு அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக தஞ்சையில் 25 விஜய் ரசிகர்கள் மீதும், நாகையில் 20 விஜய் ரசிகர்கள் மீதும், கரூரில் 10 விஜய் ரசிகர்கள்  மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments