Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (12:04 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது 
 
சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் தமிழகத்தில் தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் இதுவரை மொத்தம் தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் 
 
எனவே தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முழுமைப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை வழங்க வேண்டும் என்றும் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி உள்ளதால் அதிகளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார் இந்த மனுவை இன்னும் ஒரு சில நாட்களில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments