Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு: காவலர்களிடம் பிரச்சாரம் செய்ததாக புகார்

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (09:01 IST)
மக்களவை தேர்தல் தமிழகத்தில் நடைபெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது உச்சகட்ட பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் சமீபத்தில் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் பணியில் இருக்கும் தேர்தல் அலுவலகர்கள், காவலர்கள் தங்களுடைய தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த நிலையில் தபால் வாக்குப்பதிவின்போது தேர்தல் விதிகளை மீறி காவலர்களிடம் பிரசாரம் செய்ததாக மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது
 
இந்த புகாரின் அடிப்படையில் மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது மதுரை செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments