Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் மீது காசி அருகே வழக்குப்பதிவு: கைது செய்யப்படுவாரா?

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (17:16 IST)
கமல்ஹாசன் சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு பாஜக, இந்து மக்கள் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் கமல் மீது காசி அருகே உள்ள காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது


 


உத்தரபிரதேச மாநிலத்தில்  காசி அருகேயுள்ள பனாரஸ் காவல்நிலையத்தில் கமல் மீது வழக்கறிஞர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அவதூறு பரப்புதல், மதத்திற்கு எதிரான கருத்து தெரிவித்தல் உள்பட 5 பிரிவுகளில் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் மத சம்பந்தமான கருத்து இந்து மதத்தினர்களை அவமதிப்பதாக உள்ளதாக கூறப்பட்டதால் இந்த புகார் மனு ஏற்கப்பட்டு ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் கமல் கைது செய்யப்படுவாரா? என்பது குறித்த தகவல்கள் இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments