Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வை ரத்து.. மாணவர்களிடம் கட்டாய கையெழுத்தா? நீதிமன்றத்தில் முறையீடு..!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (12:09 IST)
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திய திமுக கையெழுத்து இயக்கம் ஆரம்பித்துள்ள நிலையில் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்குவதாக நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டுள்ளனர். 
 
ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மட்டுமே நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்ய கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதில் மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக  ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு தாக்கல் செய்துள்ளார். 
 
மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்திய நிலையில் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்து அடுத்த வாரம் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments