பொன்முடி தொகுதிக்கு இடைத்தேர்தலா? சட்டம் என்ன சொல்கிறது?

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (13:02 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதை அடுத்து அவரது எம்எல்ஏ பதவி பறிபோனது. இதனால் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தற்போது காலியாக உள்ளது. 
 
ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி ஆக இருப்பவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பதவி இழந்தால் அந்த தொகுதிக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும். மேல்முறையீடு செல்வதாக கூறி, மேல்முறையீடு நிலுவையில் உள்ளது உள்ளிட்ட காரணங்களை கூறி தேர்தலை தள்ளிப் போடக்கூடாது என ஏற்கனவே மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
இதனால் மேல்முறையீடு வழக்கை விரைந்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேல்முறையீடு வழக்கில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பதவி இழந்தால் உடனடியாக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் எந்த ஒரு சட்டமன்ற மக்களவைத் தொகுதியையும் காலியாக வைத்திருக்காமல் உடனடியாக தேர்தலை நடத்தி குடிமக்களின் பிரதிநிதித்துவ உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஏற்கனவே சில நீதிமன்ற தீர்ப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன. 
 
எனவே  பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments