Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்காடு மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 5 பேர் பலி? – மீட்பு பணிகள் தீவிரம்!

Prasanth Karthick
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (21:23 IST)
சேலம் மாவட்டத்தின் ஏற்காடு மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைப்பகுதி புகழ்பெற்ற சுற்றுலாதளமாகவும் இருந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறையில் பல சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கும் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வழக்கமாக ஏற்காடு வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது.

அப்போது திடீரென அருகே இருந்த பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்துள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் சிறுவன் உட்பட 5 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பேருந்தில் பயணித்த 45 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

காங்கிரசை கிழித்து தொங்கவிட்ட பிரதமர் மோடி.! எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி.! சபாநாயகர் கண்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments