Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம்பெண்ணுடன் லாட்ஜில் தங்கிய வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்!!

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (10:57 IST)
குற்றாலத்தில் காதல் பிரச்சனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
திருப்பூர் மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா(18), என்பவர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். கார்த்திக்கிற்கு அதே கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அது காதலாக மாறி இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
 
இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவரவே, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடைந்த காதல் ஜோடி வீட்டிலிருந்து வெளியேறி குற்றாலத்தில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.
 
நள்ளிரவில் கார்த்திக் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது காதலி ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது காதலியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments