உறவினர்களை துடைப்பத்தால் அடிக்கும் விநோத விழா

Webdunia
வியாழன், 3 மே 2018 (13:26 IST)
தேனி அருகே கோயில் திருவிழாவில் ஒருவொருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. 
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த மறவப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். 
 
அதேபோல் இவ்வாண்டின் சித்திரை மாத பொங்கல் திருவிழா, நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு நடைபெற்ற ஒரு விநோத நிகழ்ச்சி வெளியூர் மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
 
அங்கு வாழும் மாமன் - மைத்துனர்கள் ஒருவருக்கொருவரை துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்படி அடித்துக் கொள்வதால் குடும்பத்தில் நிலவும் பிரச்னைகள் நீங்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
 
இந்த நிகழ்ச்சியை வெளியூரில் இருந்து வந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர். மேலும் பலர் இதனை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments