Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உறவினர்களை துடைப்பத்தால் அடிக்கும் விநோத விழா

Webdunia
வியாழன், 3 மே 2018 (13:26 IST)
தேனி அருகே கோயில் திருவிழாவில் ஒருவொருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. 
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த மறவப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். 
 
அதேபோல் இவ்வாண்டின் சித்திரை மாத பொங்கல் திருவிழா, நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு நடைபெற்ற ஒரு விநோத நிகழ்ச்சி வெளியூர் மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
 
அங்கு வாழும் மாமன் - மைத்துனர்கள் ஒருவருக்கொருவரை துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்படி அடித்துக் கொள்வதால் குடும்பத்தில் நிலவும் பிரச்னைகள் நீங்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
 
இந்த நிகழ்ச்சியை வெளியூரில் இருந்து வந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர். மேலும் பலர் இதனை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments