Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவனின் காதுக்குள் தேனீ புகுந்ததால் பரபரப்பு

bee
, வியாழன், 27 ஏப்ரல் 2023 (16:58 IST)
வேலூர் மாவட்டம்  தட்டப்பாறை என்ற கிராமத்தில் தேன் எடுக்கச் சென்ற மாணவனின் காதில் தேனீ புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூங்கும்போது காதுக்குள்  எறும்புகள், பூச்சிகள், வண்டுகள், புகுவதைப் பார்த்திருப்போம். கடந்தாண்டு  செப்டம்பரில் பெண் ஒருவரின் காதில் பாம்பு நுழைந்துவிட்டதாக ஒரு வீடியோ வெளியாகி பரவலானது.

இந்த நிலையில்,  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை என்ற கிராமத்தில் தேன் எடுக்கச் சென்ற மாணவனின் காதில் தேனீ புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை என்ற கிராமத்தில் தேன் எடுக்கச் சென்ற 10 ஆம் வகுப்பு மாணவனின் காதுக்குள் தேனீ புகுந்துவிட்டது. இதனால் வலியால் துடித்த மாணவரைன் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள்  மாணவனின் காதில் இருந்த தேனீயை உயிருடன் வெளியே எடுத்தனர். மேலும், 2 சிறுவர்கள் தேனீ கொட்டியதற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணமான காதலிக்கு தொல்லை ...இளைஞர் கல்லால் அடித்துக் கொலை