Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன்

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து  கல்லால் அடித்துக் கொன்ற கொடூரன்
, வெள்ளி, 15 டிசம்பர் 2017 (09:45 IST)
திண்டுக்கல் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த்தோடு, அந்தச் சிறுமியை கல்லாலே அடித்துக் கொன்ற மனசாட்சி இல்லாத கொடூரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்மினபட்டியை சேர்ந்தவர் சிவகாமி. இவரது  6 வயது மகள் முத்துலட்சுமி விடுமுறையில் அவரது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார். முத்துலட்சுமியின் பாட்டியால் சிறுமியை செம்மினபட்டிக்கு கொண்டு சென்று விட முடியாததால் குப்பம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் சிறுமி முத்துலட்சுமியை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
 
ஆனால் அந்த கொடூரன் சிறுமியை வீட்டிற்கு கொண்டு சேர்க்காமல், சுக்காவழி என்ற இடத்தில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அத்தோடு இல்லாமல் சிறுமியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளான். பின்னர் சிறுமி காதில் அணிந்திருந்த நகைகள், காலில் இருந்த கொலுசு ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்ப முயன்றான். அதற்குள் பொதுமக்கள், அவனை பிடித்து வடமதுரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
சென்னையில் சிறுமி ஹாசினியை தஷ்வந்த் என்ற கொடூரன் பலாத்கரம் செய்து எரித்துக் கொலை செய்ததைப் போல், மற்றொரு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்கு ஒரே வழி, அரபு நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டணையை இந்த கொடூர வேலையை செய்த குற்றவாளிகளுக்கு கொடுத்தால் தான் அடுத்த முறை இது போல அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலீஸார் நடத்திய என்கவுண்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொலை