Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார் மோதிய விபத்தில் 3 வயது சிறுவன் பலி

covai
, புதன், 25 ஜனவரி 2023 (15:12 IST)
கோவை மாவட்டம் போத்தனூரில் கார் மோதிய விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அருகே வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பர்ஷீத். இவர் அப்பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ரைஃப்புதீன். இவர் அங்குள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 22 ஆம் தேதி சையது முகமது என்பவர் கார் ஓட்டிப் பழகிக் கொண்டிருக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த ரைஃப்புதின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளன்ர்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு? வானிலை அறிவிப்பு!