Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 வயது சிறுவனை கடத்தி சென்று குடும்பம் நடத்திய 22 வயது பெண் கைது

Webdunia
சனி, 21 ஏப்ரல் 2018 (12:47 IST)
தருமபுரியில்  22 வயது பெண் ஒருவர் 15 வயது சிறுவனை கடத்தி சென்று குடும்பம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் வேட்டகட்டமவுடு பகுதியை சேர்ந்தவர் தசரதன். தசரதனின் மகன் அருகிலுள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். தசரதனின் உறவினர் மகளான வேலம்மாளுக்கு(22), தசரதனின் மகனோடு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த தசரதன் வேலம்மாலைக் கண்டித்துள்ளார்.
 
இந்நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகன் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தசரதன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் நடத்திய விசாரனையில் ஓடி போன இருவரும் பெங்களூருவில் தங்கி குடும்பம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களை மீட்ட போலீஸார், மாணவனை குழந்தைகள் நலக் காப்பகத்தில் அனுமதித்தனர். மேலும் சிறுவனை கடத்தி குடும்பம் நடத்திய வேலம்மாலை போலீஸார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments