Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் கண்டெய்னர் லாரி மோதியதில் 2 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி

சென்னையில் கண்டெய்னர் லாரி மோதியதில் 2 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி
, திங்கள், 21 மே 2018 (07:41 IST)
சென்னை காசிமேட்டில் கண்டெய்னர் லாரி மோதியதில் 2 வயது சிறுவன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேடு அண்ணாநகரை சேர்ந்தவர் வினோத். இவருக்கு திருமணமாகி அபிஷேக்(2) என்ற மகன் உள்ளார். அபிஷேக் நேற்று மாலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.
 
அப்போது அங்கே வந்த கண்டெய்னர் லாரி  சிறுவன் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானான். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், டிரைவரை சரமாரியாக தாக்கினர். மேலும் லாரியை அடித்து நொறுக்கினர்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டிரைவரை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரவில் நன்றாக தூங்கவேண்டுமா? - இந்த 6 வழிகளை பின்பற்றுங்கள்