Publish Date: Sat, 16 Mar 2019 (11:33 IST)
Updated Date: Sat, 16 Mar 2019 (11:36 IST)
தேவாரண்யத்தில் 5 வயது சிறுமியை 10ஆம் வகுப்பு மாணவன் சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்களுக்கும். பெண் குழந்தைகளும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் வீட்டில் தனியாக இருந்த 5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். சிறுமி அலறி சத்தம் போடவே அவன் அங்கிருந்து தப்பித்துவிட்டான்.
சிறுமி தனக்கு நேர்ந்த அவலங்களை பெற்றோரிடம் கூறவே அதிர்ந்துபோன அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கேடுகெட்ட செயலை செய்த மாணவனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.