Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணணுக்காக உயிரை விட்ட தம்பி: நெஞ்சை உருக்கும் வீடியோ!

அண்ணணுக்காக உயிரை விட்ட தம்பி: நெஞ்சை உருக்கும் வீடியோ!

அண்ணணுக்காக உயிரை விட்ட தம்பி: நெஞ்சை உருக்கும் வீடியோ!
, சனி, 22 அக்டோபர் 2016 (09:51 IST)
சென்னையில் குடும்ப வறுமை காரணமாக பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் அவமானம் அடைந்த 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தற்கொலை செய்துள்ளான். தற்கொலைக்கு முன்னர் அந்த மாணவன் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.


 
 
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் மாணவன் சந்தோஷ். அவரது அண்ணன் தினேஷ் குமார் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் காரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்து வந்தனர்.
 
விபத்து ஒன்றில் சிக்கி வேலைக்கு போக முடியாத நிலைக்கு ஆனார் இவர்களது தந்தை. இதனால் இருவரது கல்வி செலவையும் கவனிக்கு முடியவில்லை அந்த குடும்பத்தால். இந்நிலையில் நான் அடுத்த வருடம் பள்ளிக்கு செல்கிறேன் அண்ணனை பள்ளிக்கு அனுப்புங்கள் என முடிவெடுத்தான் சந்தோஷ்குமார்.
 
ஆனால் பள்ளியில் அவனுக்கு நடந்த அவமானம் தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துவிட்டான். தற்கொலை செய்துகொள்ளும் முன் தனது மரணத்திற்கான காரணத்தை வீடியோவில் பதிவு செய்து விட்டு தற்கொலை செய்துள்ளான்.
 
அந்த வீடியோவில், என்னுடைய சாவுக்கு அந்த பள்ளிதான் காரணம். மேலும் தகவல் வேண்டும் என்றால் அம்மாவிடம் கேட்டுக்கொள்ளுங்கள். என்னால் பேச முடியவில்லை. அம்மா, அப்பா, அண்ணன் இனியாவது சந்தோஷமாக இருங்கள். சண்டை போடாமல் இருங்கள்.

 
 
எனக்கு சின்னதாக இரண்டு ஆசைகள் இருக்கின்றன. அதை முடிந்தால் பண்ணுங்கள். இல்லை என்றால் வேண்டாம். என்னுடைய உடல் ஒருநாள் கோயமுத்தூரிலும், இன்னொரு நாள் சென்னையில் இருக்கணும். அடுத்து ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அவர், என்னைப் பார்க்க வரணும். என்னை நினைத்து அழாதீர்கள். குட் பாய் என விடைபெற்று செல்கிறான் மாணவன் சந்தோஷ். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசு பணம் துட்டு மணி மணி: திமுகவை கிண்டலடிக்கும் அழகிரியின் மகன்!