Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய 9 ஆம் வகுப்பு மாணவன்!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (23:17 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம்  தேங்கனிக்கோட்டை அருகே உள்ள அரசுப்பள்ளியில் பள்ளி மாணவன் தன்னுடன் படிக்கும் மாணவிக்கு தாலி கட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் செயல்பாடு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம்  தேங்கனிக்கோட்டை அருகே திப்பசந்திரம் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளியில்  படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவன்,தன் வகுப்பில் படிக்கும் சக மாணவி ஒருவருக்கு பள்ளி வளாகத்தில் வைத்துத் தாலி கட்டியுள்ளார்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.  பெற்றோர் பள்ளிக்கு விரைந்து தலைமை ஆசிரியரிடம் கேட்டனர். பின்னர், மாணவனின் பெற்றோரை அழைத்து, மாணவர் மாணவியரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.   விரைவில் தேர்வு வரவுள்ளதால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments