Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

Siva
ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (14:41 IST)
பந்தயம் வைத்து நாய் சண்டை நடத்தியதாக 81 பேருக்கு கைது செய்யப்பட்ட நிலையில் 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று இரவு நாய் சண்டை பந்தயம் நடத்தப்பட்டதாகவும் இந்த பந்தயம் ஒரு பிரபலத்தின் பண்ணை வீட்டில் வைத்து நடத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் திடீரென அந்த பண்ணை வீட்டில் சோதனை செய்து 19 வெளிநாட்டு வகை நாய்கள் மற்றும் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இந்த பந்தயத்தை நடத்திய 81 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

காவல்துறையினர் சோதனை செய்ய வந்த போது அங்கிருந்து சிலர் சுவற்றில் ஏறி குதித்து தப்பிக்க முயற்சித்தனர். அதில் பலர் காவல்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து உரிமம் பெற்ற ஆயுதங்களும் மீட்கப்பட்டதாகவும் தெரிகிறது.

சண்டையில் ஈடுபடுத்தப்பட்ட சில நாய்கள் காயத்துடன் இருந்ததால், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட நபர்கள் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதற்காகவே சமூக வலைதளத்தில் ஒரு குழு அமைத்து அதில் 250 பேருக்கு அதிகமானோர் உறுப்பினராக இருப்பதாகவும், முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மவுசு அதிகரிக்கும் பொறியியல் படிப்புகள்! புதிய பிரிவுகளில் ஆர்வம்! - 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்!

பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 3000 ஆபாச வீடியோ பறிமுதல்.. கார் டிரைவர் கைது..!

ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க தடை! ட்ரம்ப் உத்தரவு- அதிர்ச்சியில் மாணவர்கள்!

திருமலையில் நமாஸ் செய்த இஸ்லாமிய நபர்.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தவெக இன்னொரு பாஜகவின் ‘பி’ டீம்.. திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments