Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவி கேட்ட சிறுமியிடம் அத்துமீறிய 8 பேர் – 2 சிறுவர்கள் உட்பட அனைவரும் கைது!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (11:04 IST)
கன்னியாகுமரியில் வறுமையில் வாடும் சிறுமி ஒருவர் உதவி கேட்க, அவரை பாலியல் ரீதியாக 8 பேர் துன்புறுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி தேங்காய் பட்டணத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என சொல்லப்படுகிறது. லாக்டவுன் காரணமாக அவருக்கு எந்த வேலையும் இல்லாததால் குடும்பத்தில் வறுமை தலைவிரித்து ஆடியுள்ளது. இதனால் அவர்களது 8 வயது சிறுமி அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்று உதவி கேட்டுள்ளார்.

அவருக்கு உதவி செய்த சிலர் அதை சாதகமாக ஆக்கிக்கொண்டு அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளனர். இதில் 4 பேர் 50 வயதைக் கடந்த முதியவர்கள் என்பதும் 2 பேர் 18 வயதுக்குக் கம்மியான மைனர் சிறுவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை சொல்ல அவர் அதை ஆடியோவாக எடுத்து போலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்