Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவி கேட்ட சிறுமியிடம் அத்துமீறிய 8 பேர் – 2 சிறுவர்கள் உட்பட அனைவரும் கைது!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (11:04 IST)
கன்னியாகுமரியில் வறுமையில் வாடும் சிறுமி ஒருவர் உதவி கேட்க, அவரை பாலியல் ரீதியாக 8 பேர் துன்புறுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி தேங்காய் பட்டணத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என சொல்லப்படுகிறது. லாக்டவுன் காரணமாக அவருக்கு எந்த வேலையும் இல்லாததால் குடும்பத்தில் வறுமை தலைவிரித்து ஆடியுள்ளது. இதனால் அவர்களது 8 வயது சிறுமி அக்கம் பக்கத்து வீடுகளுக்கு சென்று உதவி கேட்டுள்ளார்.

அவருக்கு உதவி செய்த சிலர் அதை சாதகமாக ஆக்கிக்கொண்டு அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளனர். இதில் 4 பேர் 50 வயதைக் கடந்த முதியவர்கள் என்பதும் 2 பேர் 18 வயதுக்குக் கம்மியான மைனர் சிறுவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை சொல்ல அவர் அதை ஆடியோவாக எடுத்து போலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் பஸ்ஸில் 19 வயது பெண்ணுக்கு ரகசிய பிரசவம்! குழந்தையை சாலையில் வீசிக் கொன்ற கொடூரம்!

பாஜகவை கூட்டணியில் சேர்த்ததால் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி

மதுரையில் தவெக மாநில மாநாடு.. தேதியை அறிவித்த விஜய்..!

தமிழகத்தை உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்து! - 21ம் ஆண்டு நினைவஞ்சலி!

அப்படி ஒரு திருக்குறளே இல்லையே..! ஆளுநர் கொடுத்த விருதில் சர்ச்சை! - திரும்ப பெற முடிவு?

அடுத்த கட்டுரையில்