Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் 77% வாக்குப்பதிவு

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (20:09 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 258 வாக்கு சாவடியில் நடைப்பெற்றது. மொத்தம் 77.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் இடைத்தேர்தல் இன்று காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஆர்.கே.நகர் பகுதியில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், மொத்தம் 258 வாக்குசாவடிகளிலும் ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
 
மதியம் 1 மணி நிலவரப்படி 41.06 சதவீத வாக்குகள் பதிவானது. அதன் பின்பு ஆர்.கே.நகரில் மழை பெய்தது. ஆனாலும், பொதுமக்கள் பொறுமையுடன் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர்.
 
ஆனால், 5 மணி வரை மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதால், 5 மணிக்கு முன் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் 258 வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
 
மொத்தம் 77.68% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். வரும் ஞாயிறு (24.12.2017) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments