Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 ஆயிரம் பேர் தீபாவளி பண்டிகைக்காக முன்பதிவு

7 ஆயிரம் பேர் தீபாவளி பண்டிகைக்காக முன்பதிவு
, செவ்வாய், 12 அக்டோபர் 2021 (14:03 IST)
இது வரையில் 7 ஆயிரம் பேர் தீபாவளி பண்டிகைக்காக முன்பதிவு செய்திருப்பதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்.
 
தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலரும் தங்கள் சொத்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் அந்த சமயம் சிறப்பு பேருந்துகள் பல இயக்கப்படுவது வழக்கம். 
 
அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னை மற்றும் மற்ற நகரங்களில் இருந்து 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் இந்த சிறப்பு பேருந்துகள் செயல்படும்.
 
இந்நிலையில் இது வரையில் 7 ஆயிரம் பேர் தீபாவளி பண்டிகைக்காக முன்பதிவு செய்திருப்பதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. நவம்பர் 2 ஆம் தேதி பயணம் செய்ய 4 ஆயிரம் பேரும், 3 ஆம் தேதி பயணம் செய்ய 3 ஆயிரம் பேரும் இதுவரையில் முன்பதிவு செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருநெல்வேலி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம்!