வைரஸ் காய்ச்சலால் நேர்ந்த பரிதாபம்; பலியான 7 வயது சிறுமி

Arun Prasath
புதன், 13 நவம்பர் 2019 (13:55 IST)
வைரஸ் காய்ச்சலால் 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆங்காங்கே பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வைரஸ் காய்ச்சலால் பல சிறுவர் சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த செந்தில்-ராஜமீனா தம்பதியரின் ஏழு வயது மகளான தியாஷினி, கடந்த 3 நாட்களாக வைரஸ் காய்ச்சலால் அவதிபட்டு வந்தார். தியாஷினியை அவரது பெற்றோர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால் நேற்று நள்ளிரவு தியாஷினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெறும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments