Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்கள் 7 பேர் மீண்டும் கைது.. தொடர் அட்டுழியத்திற்கு முடிவே இல்லையா?

Siva
ஞாயிறு, 13 ஜூலை 2025 (09:13 IST)
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்களுக்கு முடிவே இல்லாமலும் இருந்து வருகிறது.
 
இந்த நிலையில், இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் ஏழு பேர் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுடைய படகையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. மேலும், கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments