Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (20:58 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்து வந்த மழை தற்போது சுத்தமாக நின்றுவிட்டதால் அடுத்ததாக எப்போது மழை பெய்யும் என விவசாயிகள் காத்திருக்கின்றனர். சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது குடிநீர் கஷ்டம் ஓரளவு சரியாகிவிட்டாலும், விவசாயத்திற்கு இன்னும் மழை தேவை

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வளிமண்டல மேலடுக்கில் காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னைவானிலை மையம் தெரிவித்துள்ளது

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை நகரில் பல பகுதிகளில் லேசான மழை பெய்ய  வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments