Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போக்குவரத்து விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து: சென்னை காவல்துறை..!

போக்குவரத்து விதிகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து: சென்னை காவல்துறை..!
, வெள்ளி, 8 டிசம்பர் 2023 (18:55 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக தானியங்கி கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் டிசம்பர் மூன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 6670 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த 3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை போக்குவரத்து விதிகளை மீறியதாக நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட 6,670 வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24 மணி நேரமும் ஆவின் பால் விற்பனை!