Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6,000 கன அடி நீர் திறக்க முடிவு..பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (07:56 IST)
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 2500 கன அடி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால் 6000 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்து சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று 1000 கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 2500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீரின் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து  6 ஆயிரம் கன அடி நீர் திறக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இன்று காலை 8 மணி முதல் 6000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாகவும் எனவே  தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments