Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7000ஐ நெருங்கியது தமிழக கொரோனா பாதிப்பு: சென்னை தவிர பிற பகுதிகளில் அதிகரிப்பதால் பரபரப்பு

7000ஐ நெருங்கியது தமிழக கொரோனா பாதிப்பு: சென்னை தவிர பிற பகுதிகளில் அதிகரிப்பதால் பரபரப்பு
, வெள்ளி, 24 ஜூலை 2020 (18:09 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 6,785 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 199,749 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6,785 பேர்களில் 1299 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,206 
ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 88 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 6,504 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 143,297 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 65,150 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிறைமாத கர்ப்பினி பெண்ணை அண்டாவில் வைத்து தூக்கி சென்ற உறவினர்கள்… மருத்துவமனையில் நடந்த கொடூரம்!