Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டில் பங்கேற்க 5,500 பேர் விண்ணப்பம்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (11:31 IST)
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க இதுவரை 5,500 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர் என தகவல். 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
 
பொங்கலை ஒட்டி நடத்தப்படும் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு வழங்கியது. இதற்கான முன்பதிவு நேற்று 3 மணிக்கு தொடங்கியது.
 
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க இதுவரை 5,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 3,900 காளைகள், 1,600 மாடுபிடி வீரர்கள் என 5,500 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments